Tuesday 28 July 2020

என்ன கொடுமை இதெல்லாம்..சென்னையிலும்..

என்ன கொடுமை இதெல்லாம்..சென்னையிலும்..
இரு தினங்களுக்கு முன்புதான் பெங்களுரூவில் கொரோனா தொற்று என சொல்லி ஒரு அபார்ட்மெண்ட் வீட்டு வாயில் கதவையே தகரத்தால் மூடினார்கள். பிரச்சினை வெடித்ததும் தகரத்தை அகற்றினார்கள்..மாநகராட்சி ஆணையரே மன்னிப்பு கோரினார்..
இப்போது சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனது தங்கை வீட்டில் கொரோனா பாதிப்பு எனச்சொல்லி ஒன்பது வயது சிறுமி உட்பட ஆட்களை உள்ளே வைத்து தகரத்தால் மூடிவிட்டதாக வேதனைப்பட்டு புகைப்படங்களை நமக்கு அனுப்பியிருக்கிறார் நம்முடைய நண்பர் ஒருவர்.....
முழுநாடும் கொரோனாவைவிட தகர ஷீட்டோடு தான் அதிகமாக போராட வேண்டியிருக்கிறது..
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் என்ன செய்யப்போகிறாரோ?

No comments:

Post a Comment