Wednesday 29 July 2020

கடத்தல் தீவிரவாதம் கூட்டணி.

காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே மாறி,மாறி ஆட்சி செய்த ஒரே காரணத்தால்தான் கேரளா முன்னணி மாநிலமாக உள்ளதோ..?
கேரளாவில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் 149 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு,காசர்கோடு,மலப்புரம் உட்பட சில மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 24 பேர் கடந்த 2016ம் ஆண்டு சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை உறுதிப்படுத்துவது போல், கேரளா மற்றும் கர்நாடகாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகளவில் செயல்பட்டு வருவதாக ஐநா அமைப்பு சில நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், மத்திய உளவுத்துறை இது தொடர்பான அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில், '2017 முதல் 2019 வரை கேரளாவை சேர்ந்த மேலும் 149 பேர், வெளிநாடுகளுக்கு சென்று ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.இவர்களுடன் கேரளாவை சேர்ந்த பலர் தொடர்பு வைத்துள்ளனர், என்று கூறப்பட்டுள்ளது.
'ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ள 149 பேரும், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பாலக்காடு மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
இவர்களில் 32 பேர் வளைகுடா நாடுகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.
149 பேரில்,100 பேர் தங்களின் குடும்பத்துடன் சென்றுள்ளனர். இதனால், இக்குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்களும் தீவிரவாதிகளாக மாறி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உலக நாடுகளில் தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது போல..?இந்தியாவில் தீவிரவாதிகளின் புகலிடமாக கேரள மாநிலம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியும்,கம்யூனிஸ்ட்டும் தொடர்ந்து மாறி,மாறி ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் கேரளாதான்.இவ்வளவு சின்ன மாநிலமான கேரளாவில்தான்,நமது நாட்டிலேயே,அதிகமான தீவிரவாதிகளும், தங்கம் கடத்தல் மற்றும் ஹவாலா மோசடி மன்னன்களும் அதிகம் உள்ள முன்னனணி மாநிலமாக கேரளா உள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து,நமது நாட்டிற்க்கு எதிரான தேசதுரோகிகளைத்தான் வளர்த்துள்ளன. ஆதலால்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளமாநிலத்தை தேர்வு செய்ததும்,கேரள மக்கள் ராகுல்காந்தியை எம்.பி.யாக தேர்வு செய்ததும் காரணமோ?
அண்மையில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் இருந்துதான் அதிகமானவர்கள் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.
நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக,நமது முன்னோர்கள் பலர் இரத்தம் சிந்தி,உயிரைக்கொடுத்து தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி,இன்று நமது தேசத்திற்கு எதிரான,தேச துரோகிகளின் புகலிடமாக உள்ளது.

No comments:

Post a Comment