Wednesday 29 July 2020

வாழிய கொடையுள்ளம். ராமர் கோயில்...பூமி பூஜை...தங்க செங்கல் கொடுக்கும் மொகலாயர் வாரிசு!!

வாழிய கொடையுள்ளம்.
ராமர் கோயில்...பூமி பூஜை...தங்க செங்கல் கொடுக்கும் மொகலாயர் வாரிசு!!
மொகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபரின் வாரிசாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட இளவரசர் ஹபீப்புதீன் டுசி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு கிலோ எடையிலான தங்க செங்கல் ஒன்றை பிரதமர் மோடியிடம் அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு முதல் செங்கல்லாக தான் கொடுக்கும் ஒரு கிலோ எடையிலான தங்க செங்கல்லை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு அளிப்பதற்கு என்று கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பே ஒரு கிலோ எடையிலான தங்க செங்கல்லை டெல்லியில் ஆர்டர் கொடுத்து பெற்று விட்டேன். இதன் மதிப்பு ரூ. 1.80 கோடி. இந்த செங்கல்லை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியை சந்தித்துக் கொடுக்க அவரிடம் நேரம் ஒதுக்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளேன். எனக்கு அழைப்பு வந்தால் கண்டிப்பாக நான் பூமி பூஜையில் கலந்து கொள்வேன். இந்து சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த செங்கல் டிசைனுக்கு டுசிதான் ஆலோசனை வழங்கியுள்ளார். செங்கல்லில் ''ஜெய் ராம்'' என்று பதியப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment