Friday 24 July 2020

வாழ்தலே வழிபாடு. *குளியல்அறையில் மயக்கம்*

வாழ்தலே வழிபாடு.
*குளியல்அறையில் மயக்கம்*
ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் விழுந்த பிறகு பக்கவாதம் மற்றும் மயக்கம் போன்ற கவலையான செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
ஆரோக்கியமான குளியல் முறை
குளிக்கும் போது முதலில் தலையை கழுவ(நனைக்க) வேண்டாம் என்று அறிவுறுத்தினர் முன்னோர்கள்
நாம் குளிக்கும்போது முதலில் உடலின் கால் வயிறு பாகங்களை நனைக்க வேண்டும்.
ஏனென்றால், தலை முதலில் ஈரமாய் குளிர்ந்தால், ​​தலையை சூடாக்க இரத்தம் நம் தலையை நோக்கி பாயும்.
அச்சமயத்தில் இரத்தம் பயணிக்கக் கூடிய நாளங்கள் குறுகினால், அது இரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது.
இது வழக்கமாக குளியலறை யில் மட்டுமே நடப்பதால் இது போன்று நிகழாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு.
நாம் முதலில் குளிக்கும் போது எதில் இருந்து நீர் ஊற்ற தொடங்கி பின் தலைக்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும்
1. ஈரப்பதம் பாதத்தின் அடிப் பகுதி யிலிருந்து தொடங்கு கிறது.
2. பாதத்திற்கு மேல் உள்ள முழங்கால் பகுதி.
3. தொடைகள்.
4. அடிவயிறு.
5. தோள்பட்டை. ஆறு கடல் அருவி என எங்கும்
இச்சமயம் நம் உடலில் இருந்து நீராவி அல்லது காற்று நிரம்பி வழிவது போல் உணருவோம், பின்னர் தலைக்கு நீரூற்றி குளிக்கவும்.
முதலில் நேரடியாக தலைக்கு நீர் ஊற்றுவது என்பது சூடான நீரில் நிரப்பப்பட்ட கண்ணாடி கிளாஸில் , குளிர்ந்த நீரை நிரப்பினால். என்ன நடக்கும்?
கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டு உடையும் ....
இந்த நிகழ்வு நம் உடலில் ஏற்பட்டால் ... எது உடையும்?
பொதுவாக நமது உடல் வெப்பநிலை சூடாகவும், தண்ணீர் குளிராகவும் இருக்கிறது, எனவே முதலில் நாம் உடலில் அல்லது தலையில் நேரடியாக நீர் ஊற்றும்போது, இரத்த நாளங்கள் சிதைவதால் காற்று சிக்கிக் கொள்ளும் அல்லது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
❌ தவறான குளியல் முறையின் காரணமாகவே, பலருக்கு பக்கவாதம் அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.
இந்த பாதம் முதல் தலைவரை நீரூற்றி குளிக்கும் முறையானது அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது.
அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ஒற்றைத் தலைவலி / தலைவலி உள்ளவர் களுக்கு மிகவும் ஏற்றது.
அன்றாட வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குளியல் முக்கியமானது
*நோயற்ற பெரு வாழ்வு வாழ்வோம்*
*படியுங்க,பழகுங்கள்,பயனடையுங்கள்
வாழ்க வளமுடன் வாழ்தலே வழிபாடு

No comments:

Post a Comment