இனிய காலை வணக்கம் நட்புகளே!!
இனிய வாரத்தின் தொடக்கம் இன்று.
நமது வாழ்க்கை பயணம் ஒரு மகத்தான நதியைப்போல தான்.
நதியின் ஓட்டததில் சிறிது வேககுறைவு ஏற்படலாம், பெறுவெள்ளத்தால் சிறிது திசைமாறி தடுமாறலாம்.
என்றாலும் நதி தனது நோக்கத்தை கைவிடுவதில்லை..
தனது இலக்கை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும்..
இறுதியில் தனது எல்லையை சென்றடைந்துவிடும்.
அதுபோல்தான் மனித வாழ்க்கையும்..
நமது வாழ்க்கையில்… முயற்சியில்…எண்ணத்தில்.. சந்தோஷத்தில்…நோக்கத்தில்
எத்தனையோ இடர்பாடுகள், இன்னல்கள், தடைகள் தோன்றினாலும்…
வாழ்க்கை அதன் முடிவை நோக்கி ஓடிக்கொண்டுதான் இருக்கபோகின்றது..நாட்களும் நக்ர்ந்துகொண்டேதான் இருக்கப்போகின்றது….
இதனிடையில் எதற்காக வன்மம், கோபம், பொறாமை
துவேஷம், அழுகை , கண்ணீர், கவலை …
இவைகளால் ஏற்படும் மனவியாதி மருந்துகளெல்லாம்..
அமைதியாக , அழகாக, கவலையின்றி, எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, பொறுத்துக்கொண்டு, நாமும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாமே…
கவலை கண்ணீரால் பெரிதாக மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடப்போவதில்லை…
தாமரை இலையில் தண்ணீரின் மனநிலையில் நடப்பவற்றை அனுபவிப்பதே இன்பத்தின் எல்லை
படித்ததும் பிடித்ததும் .
சண்முகம் தியாகராஜன்
நன்றி அருணாசலம் அழகப்பன்
No comments:
Post a Comment