நல்லெண்ணம் நடவு செய்திடலாம்.
பேச வேண்டிய இடத்தில் பேசாதவனும் கெட்டான் .
பேச கூடாத இடத்தில்
பேசியவனும் கெட்டான் .
நாம் கெடுவது எல்லாம் நம் கையாலும் , வாயாலும் தான் .
நீங்கள் நினைப்பது போல் உங்கள் நிழல் கூட
நடப்பதில்லை.
பிறகு ஏன் நீங்கள் நினைப்பது போல்
மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று
எதிர்பார்க்கிறீர்கள்.
கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடருங்கள்;
வாகனங்களை மட்டுமல்ல, உறவுகளையும் தான்.
வாழ்க்கையில் எல்லா உறவுகளும் நல்லபடியாக கடைசி வரை நீடிக்க வேண்டுமெனில் சிறு இடைவெளி அவசியம்.
எப்போதும் நினைவில் வையுங்கள். எதையும் சேர்ப்பது மிகக் கடினம், ஆனால் செலவு செய்வது மிக எளிது.
பணம் மட்டுமல்ல,
அடுத்தவர் உள்ளத்தில் நாம் சேர்த்து வைக்கும்
நல்லெண்ணம் கூட.
No comments:
Post a Comment