திருப்பூர் விஜி நிட்டிங் ஆர்எம். சுப்பிரமணியன் மகள் மணவிழா
வாழிய மணமக்கள்.
இன்று காலை நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற அருமை நண்பர், சிறந்த அறப்பணிச் செம்மல், திருப்பூர் நகரத்தார் சங்கத்தின் ஆற்றல் மிக்க இளம் தலைவர், கடுமையான உழைப்பும் சமூக அக்கறையும், வாரி வழங்கும் பேருள்ளம் கொண்ட
உண்ணாமலை - அருணாசலம் திருமண விழாவில் மனிதத்தேனீ. கார் லேனா என்ற ஏஎல் எஸ்பி. லெட்சுமணன், பேக் சோமு, எல் எஸ். ஆறுமுகம் உள்ளனர்.
விழாவில் பால்வீ வீரப்பன், ஆத்மாலயா எம். சுப்பையா, ஈரோடு லேனா நாராயணன் மற்றும் சகோதரர்கள், கிர்லோ வீரப்பன், திருப்பூர் நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள் எல் ராமசாமி, சிதம்பரம் மற்றும் ஆடிட்டர் ஆர்எம். முத்துராமன், , காசி சத்திர மேலாளர் கிருஷ்ணன், கார்த்திக் ஹோட்டல் கண. வீரப்பன், எலெக்ட்ரிக் சொக்கலிங்கம், நா. ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான நகரத்தார் பெருமக்கள் மற்றும் நண்பர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்று பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
மணவிழாவை முன்னிட்டு பல்வேறு வீதியில் நான்கு பக்கமும் அழகிய அலங்காரம் செய்யப்பட்டு, பழத் தோரணங்கள், மிகப் புதுமையான உணவுக் கூடம், பல்வேறு வகையான பழச்சாறு, சிறப்பான உணவு, எவ்வூர் சென்றாலும் செவ்வூர் பாண்டி அறுசுவை உணவு என மிக நேர்த்தியான ஏற்பாடுகள்.
திருமண அரங்கில் அழகான ஏற்பாடு, இன்னிசை விருந்து என தன் மகள் மணவிழாவை ஒரு மக்கள் திருவிழாவாக நண்பர் ஆர்எம். சுப்பிரமணியன் நடத்தியது கண்டு அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment