சில முயற்சிகள் நமக்கு வெற்றிகளைத் தரும், சில முயற்சிகள் நமக்கு தோல்விகளைத் தரும்.
எனினும் நம் எல்லா முயற்சிகளும் நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
கடலை சேரும் வரை ஓடிக்கொண்டே இருக்கும் நதியைப் போலவே தொடர்ச்சியாய் இருக்கட்டும் உங்கள் முயற்சிகள்.
நினைத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி.
முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி.
இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி.
மூன்றாவது முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலியாகிறான்.
ஆனால், வெற்றிபெறும் வரை முயற்சி செய்பவனோ சாதனையாளனாகிறான்
No comments:
Post a Comment