Thursday 8 September 2022

இயற்கை கற்றுத் தரும் கல்வி

 இயற்கை கற்றுத் தரும் கல்வி

பேரம் பேசி வாங்கி வந்த ஒரு கிலோ தக்காளியில், ஒன்றிரண்டு அழுகிப் போக, வேண்டாம் என்று அதை புழக்கடையில் வீசி எறிந்தேன்.
பத்து நாட்களுக்குப் பிறகு எதேச்சையாக அந்தப் பக்கம் போனபோது பச்சைப் பசேலென முளைத்த குறுத்து கண்களில் பட இது என்ன பெரிதாக தளிர்த்து விடப்போகிறது என்று நான் நகர்ந்தேன்.
அழுகிய தக்காளியில் இருந்து விழுந்த விதைகளும், மண்ணிலிருந்த ஈரத்தன்மையும் இவை இரண்டும் சங்கமிக்க இந்த நிகழ்விற்கு வானம் அவ்வப்போது (மழையாய்) நீர் இறைக்க விழுந்த நீரின் வேகம் தாளாமல் மேலெழுந்த மண்புழுக்கள் குறுக்கும், நெடுக்குமாக நகர்ந்து அதற்கு பிராணம் கொடுக்க
கதிரவன் ஒளி சேர்க்க
இரண்டு மாதம் கழித்து அந்தச் செடியில் பூத்துக் காய்த்து தக்காளி என் கண்களை உறுத்தியது.
அவை கனிவதற்குள் பறித்துவந்து கூடையில் அடுக்கி விட்டேன்.
விழுந்தாலும் வித்தாக எழ வேண்டும் என்பதை,
இயற்கை அனுதினமும், நமக்கு ஒன்றை உணர்த்திக்கொண்டேதான் இருக்கிறது
அது முயன்றால் முடியுமென்று.
வேண்டாம் என்று நான் வீசிய அழுகிய தக்காளி என்னைப் பார்த்துச் சொன்னது.
மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையை.

No comments:

Post a Comment