Wednesday 14 September 2022

இன்று காலை மதுரை மேலப் பொன்னகரத்தில் நடைபெற்ற கந்தபிள்ளை முருகேசன் வசந்த விழாவில் மனிதத்தேனீ. இன்று காலை மதுரை மேலப் பொன்னகரம் அன்னை வேளாங்கண்ணி மகாலில் நடைபெற்ற அருமை நண்பர், அறுபதாண்டு கால கந்தபிள்ளை சாஸ்தா உணவகத்தின் உரிமையாளர் க முருகேசன் - மோகனா தம்பதியரின் வசந்த விழாவில் மனிதத்தேனீ பங்கேற்று வாழ்த்திய தருணம். அருகில் சுற்றமும் நட்பும் இதழ் ஆசிரியர் மீ. ராமசுப்பிரமணியன், கவிஞர் சு. பாலகிருஷ்ணன், ஒளி ஓவியர் ரெ. கார்த்திகேயன், சென்னை ஞான சேசு பால்ராஜ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அருண்குமார் மற்றும் த மா கா மூத்த தலைவர், மேனாள் மாமன்ற உறுப்பினர் ஐ. சிலுவை. உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர். வாழிய கந்தபிள்ளை முருகேசன் குடும்பத்தினர்.

 





No comments:

Post a Comment