Friday 9 September 2022

மாநகர் மதுரையில் மாநாடு போல நடைபெற்ற அமைச்சர் பி மூர்த்தி மகன் திருமண வரவேற்பு.

 மாநகர் மதுரையில் மாநாடு போல நடைபெற்ற அமைச்சர் பி மூர்த்தி மகன் திருமண வரவேற்பு.

வாழிய மணமக்கள்.
இன்று மாலை மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் பிரம்மாண்டமான முறையில் ஐம்பதாயிரம் பேர் அமரக்கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில், அரசியல் களத்தில் தொடக்க காலம் தொட்டு ஒரே அரசியல் நேர்கோட்டில் பயணப்படும் நமது நண்பர், தொண்டர் பலம் நிறைந்த தி மு க மூத்த தலைவர், பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சர், மாண்புமிகு
பி. மூர்த்தி அவர்களின் மகன்
தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி
திருமண விழாவில் மனிதத்தேனீ, அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன்.தி மு க முன்னணி தலைவர், ஹரி கிரானைட் உரிமையாளர் அழகு பாண்டி, சி என் ஐ கோபிசன் கோபுரம் புரமோட்டர்ஸ் உரிமையாளர் பி. மூர்த்தி.
ம தி மு க சட்ட மன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் மலேசிய பாண்டியன், மாணிக்கா இளங்குமரன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை பொது மேலாளர் பாண்டியராஜன், அமைச்சரின் அண்ணன் பி. சுரேந்திரன், விளாச்சேரி வி மைதீன் சுக்கூர் , அரிமா சங்க மேனாள் ஆளுநர் பொறியாளர் வி. முருகேசன் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இரவு உணவு விருந்தில் இருபத்தைந்து ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
பொது விருந்து பல்லாயிரம் மக்கள் பங்கேற்று அமர்ந்து சாப்பிட ஏற்பாடு விரிவாக செய்யப்பட்டுள்ளது.
அரங்க வடிவமைப்பு, அமர்ந்து மணவிழாவைக் காண்பதற்காக பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மண்ணின் மைந்தர், அமைச்சர்
பி. மூர்த்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், இயக்கத்தின் செயல்வீரர்கள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
வாழிய மணமக்கள் பல்லாண்டு.

















No comments:

Post a Comment