Saturday 24 September 2022

கண்டனூரில் நடைபெற்ற எங்கள் மாமியாரின் தம்பி சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா.

 கண்டனூரில் நடைபெற்ற எங்கள் மாமியாரின் தம்பி சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா.

இன்று காலை ஊரே திருவிழாவாக கூடி மகிழ்ந்த கண்டனூர் சி ராம கரு. ரெங்கநாதன் செட்டியார் - மீனாட்சி ஆச்சி பீமரத சாந்தி விழா வ உ சி தெரு அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.
உறவினர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்தினர்.
பிள்ளையார்பட்டி விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள் குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பான முறையில் நடைபெற்றது.
வாழ்த்தரங்கத்தில் கண்டனூர் அருளாடியார் அவர்கள் தலைமையில் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், குழந்தைக் கவிஞர் செல்லக் கணபதி, வாஷிங்டன் வீரப்பன் பேசினர்.
ராம இளங்கோ நன்றி கூறினார்.
வளரும் தலைமுறையும் வளர்ந்த தலைமுறையும் கை கோர்த்துக் கொண்டு மிகச்சிறப்பாக நடத்தினர்.
நாதஸ்வர சக்கரவர்த்தி வேதமூர்த்தி, சிறந்த ஒலி பெருக்கி ரேவதி சவுண்ட் சர்வீஸ், சமையல் கலைச் செம்மல்
ஏசிஎன் குமார் இவர்களின் சிறந்த பங்களிப்பு கூடுதல் சிறப்பு.
வாழிய தம்பதியர் வாழியவே.





No comments:

Post a Comment