Wednesday 28 September 2022

செட்டிநாட்டின் பெருநகரம் தேவகோட்டை மாநகரத்தின் செயல் செம்மல் காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட மாநகர் மதுரையில் இன்று நம் சமூகப் பெருமக்களை சந்தித்து பேராதரவினைப் பெற்றார். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் செயலாளர் பணியாற்றிட களம் காணும் அன்புச் சகோதரர் சொ. கதிரேசன் அவர்களுக்கு மனிதத்தேனீ கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த தருணம். தேவகோட்டை நகரச் சிவன் கோவில் மேனாள் மேனேஜிங் டிரஸ்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் முதுநிலை மேலாளர், பொது வாழ்வின் முன்னோடி எஸ். சொர்ணநாதன் அவர்கள் ஒருங்கிணைப்பில் நகரச் சிவன் கோவில் மேனாள் டிரஸ்டிகள் எஸ்எம். ராமநாதன், சன் ஐஸ் எஸ். ராமநாதன் உள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்குக் கோபுரம் திருப்பணி செய்த வயிநாகரம் குடும்பத்தினர் பணியைக் கருத்தில் கொண்டு, பெருநகருக்குப் பெருமை சேர்க்கும் வெற்றியைப் பெற்றிடுவோம்.


 

No comments:

Post a Comment