Saturday 27 August 2022

வளரும் தலைமுறையை வாழ்த்திய தருணம். நேற்று மாலை ஹைடெக் அராய் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிவரும் துடிப்பான இளைஞர், முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் நற்சிந்தனைகளைப் பதிவிடும் கண்டனூர் க. செந்தில்நாதன் பணி மேலும் சிறந்திட பாராட்டி கைத்தறி ஆடை அணிவித்து மகிழ்ந்த மனிதத்தேனீ. அருகில் அவரது தந்தை, எங்கள் இளமைக் காலம் தொட்டு மதுரையில் வசித்து வரும் மேனாள் ஐசிஐசிஐ வங்கியின் உயர் பொறுப்பில் பணியாற்றிய நண்பர் ஆர்எம். கண்ணன், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் துணைத் தலைவர் கண்டனூர் எம். முருகப்பன், செந்தில்நாதன் மாமனார், ஓய்வறியா உழைப்பாளி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனம் மேலமாசி வீதியில் முத்துக்குமார் & கோ என்ற பெயரில் மக்களின் நம்பிக்கை நாணயத்தைப் பெற்ற தேவகோட்டை அண. முத்துக்குமார் மற்றும் சண்முகப் பிரியா செந்தில்நாதன் உள்ளனர். வளரட்டும் தலைமுறை, சிறக்கட்டும் பேராற்றல் - மனிதத்தேனீ


 

No comments:

Post a Comment