கவிஞர் வீட்டில் அசைவம் சமைத்தால் கர்மவீரர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்
இரவு நேரங்களில் இருவரும் சந்திக்க நேர்ந்தால் நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டே இருப்பார்களாம்
கவிஞர் அன்பு நட்பு ரீதியாக 3 நடிகைகளை மட்டுமே அடிக்கடி குறிப்பிடுவாராம். TR ராஜகுமாரி..மனோரமா..தேவிகா
"சிவகாமி உமையவளே முத்துமாரி உன் செல்வனுக்கு காலம் உண்டு முத்துமாரி"" கர்ம வீரரைப் புகழ்ந்து எழுதியது... பட்டிக்காடா பட்டணமா
"இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி... இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி""... எவ்வளவு ஆழமான காதல் பிரிவின் வேதனை வரிகளய்யா-- இதயக்கமலம்
""எங்குமே என் பெயர் தான் தெரிகிறது. மக்களுக்கு போரடித்து விடாதா? ஆரோக்கியமான போட்டி இல்லையே. எனக்கே போரடித்து விட்டது"" என்று ஒரு காலக் கட்டத்தில் கவிஞரே கூறியதுண்டு
"பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த"" அருமை காதல் பாடல்-- ஆனந்த ஜோதி.. தேவிகா கவிஞரை சந்திக்கும் போதெல்லாம் பாடுவாராம்
""அத்திக்காய் காய் காய் ஆலங்காய்"" எத்தனை காய் என்று எண்ணி சொல்லுங்களேன்...மேலும் இப்பாடலில் உள்ள இலைமறை காய் அர்த்தங்கள் இன்னும் புரியவில்லைபலே பாண்டியா.
"சத்தியம் தோற்றதுண்டா உலகில் தர்மம் அழிந்ததுண்டா""...சிந்திக்க வைக்கும் வரிகள்... ஆனந்த ஜோதி
நன்றி சாந்தாராம் மும்பை
கண்ணதாசன் தமிழ்ப் பேரவை வாட்சாப்
No comments:
Post a Comment