Monday 22 August 2022

70 ஆம் ஆண்டு பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடிய பேராற்றல் மிக்க எஸ். பி. ஜெயப்பிரகாஷ். நேற்று நண்பகல் கோர்ட்யார்ட் மேரியாட் ஹோட்டலில் நடைபெற்ற மாநகர் மதுரையின் ஆளுமைகளில் ஒருவரான தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர், எஸ் பி ஜெ சேம்பர் செங்கல் நிறுவனம், எஸ்பிஜெ மெட்ரிக் மேல்நிலை பள்ளி, நித்தில்லா நர்சிங் ஹோம், அஷ்வின், நித்தூஸ், நித்தில்லா மருத்துவ நிறுவனங்கள், ஸ்ரீ லெட்சுமி பார்மசி, ஸ்ரீ லெட்சுமி மெடிக்கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நெறியாளர் எஸ். பி. ஜெயப்பிரகாஷ் - ராதிகா மாலா தம்பதியர் சுற்றமும் நட்பும் வருகை தந்து மிக நேர்த்தியாகக் கொண்டாடினர். மனிதத்தேனீ, பொறியாளர் சொ. ராம்குமார் தம்பதியரை வணங்கி வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தனர். ஒரு தலைசிறந்த நிர்வாகியின் பிறந்தநாள் மாநகர் மதுரைக்கு மட்டுமல்ல தொழில் மற்றும் வணிகம் சார்ந்த துறைக்கு திருவிழாவாக அமைந்தது. விழாவில் திண்டுக்கல் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் எஸ் வி. சித்தன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி வி ராஜன் செல்லப்பா, ரோட்டரி ஆளுநர் இதயம் வீஆர் முத்து, பெரீஸ் மகேந்திரவேல், மகாத்மா பள்ளி பிரேமலதா பன்னீர்செல்வம், பன்னீர்செல்வம், வேல் சங்கர், நூர் முகமது, சாகுல் அமீது, சத்தியமூர்த்தி, கே. திருமுருகன், சிபிஎம் விஜயராஜன், லெனின் உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று வாழ்த்தியும் வணங்கியும் மகிழ்ந்தனர். அவரது தம்பி எஸ் பி. ஜெயராஜ், எஸ்பிஜெ மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகி ஜெ. பழனிச்சாமி, பழங்காநத்தம் நித்தில்லா மருத்துவ மனை டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர். வாழிய மேன்மையான குடும்பம்.

















 

No comments:

Post a Comment