Tuesday 30 August 2022

சென்னை அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சோழ சக்கரவர்த்தி இராஜராஜ சோழனால் உருவாக்காப்பட்ட அற்புதமான சிவாலயம். ""ராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் ஆலயம். "" காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னையை அடுத்த ""ஒரகடம்""அருகே ""சிவபுரம்"" என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. முற்றிலும் கருங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பழமையான ஆலயம். முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இந்த ஆலயத் திருப்பணிகள் நிறைவுபெற்றது. இந்த ஆலயத்தின் உள்ளே அழகான கற் சிற்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது. இக்கோவில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. சென்னையில் வசிப்பவர்கள் அவசியம் வழிபாடு செய்யவேண்டிய அழகிய சிவனாலயம். அன்பே சிவம்!!!



 

No comments:

Post a Comment