Wednesday 30 August 2023

புண்ணியம் சிறந்த புண்ணியம் . .

 புண்ணியம் சிறந்த புண்ணியம் . .

*முன்னேற்றத்தின்
எதிரி சோம்பல்*
*உழைப்பின் நண்பன்
சுறுசுறுப்பு.*
*நம் நம்பிக்கையின் திறவுகோல்.*
*தைரியம்.*
*தவறு செய்தால்.*
*தலை குனிந்து மன்னிப்பு கேட்போம் .*
*இல்லை எனில்.*
*தலை நிமிர்ந்து நடப்போம்.*
*உற்சாகமுள்ளவனை
எதிர்ப்புகள் தடை செய்வதில்லை.*
*மாறாக, அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது.*
*கெடுத்து ரசிப்பதோ பாவம்.*
*கொடுத்து மகிழ்வதே புண்ணியம்.*
*நிறைய விஷயங்களைத்
தவறாகப் புரிந்து கொள்வதை விட, குறைந்த விஷயங்களை
சரியாகப் புரிந்து கொள்வதே சிறந்தது.*
*நல்லவர்களை நாம் தேடத் தேவையில்லை.
நாம் நல்லவராக இருந்தால் போதும், நம்மைத் தேடி நல்லவர்கள் மட்டுமே வருவார்கள்.*
*பிரச்சனைகளைத் தீர்க்க பழகிக் கொள்ளுங்கள்.
கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.*
*வாழ்க்கையில் சந்தோசமும், அமைதியும் வேண்டுமெனில்*
*செய்யும் செயலை விட*
*பேசும் வார்த்தையில் கவனம் தேவை*
*எதற்கும் எப்போதும்
தயாராக இருங்கள்.*
*சில நேரங்களில் நீங்கள் யூகிக்க முடியாத பல விஷயங்கள்
உங்களுக்கு எதிராய்த் திரும்பும்.*
*கடந்து போகக் கற்றுக் கொள்ளுங்கள்*
*மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக்கொண்டிருந்தால்
நிம்மதி இருக்காது.*
*உங்கள் எண்ணங்கள் எப்படியோ, அப்படித்தான் வாழ்கையும் அமையும்.*
*எனவே, எல்லா சூழ்நிலைகளிலும் சிறந்ததையே எண்ண முயற்சி செய்யுங்கள்.*
*நல்லதைச் சிந்தித்தல்,
பேசுதல்,
கேட்டல்
ஆகியன மட்டும் போதாது.*
*அந்த நல்லவை அனைத்தும் உங்களது ஒவ்வொரு காரியத்திலும் மிளிர வேண்டும்.*
*அப்படிப் பிரகாசித்தால் தான் வெற்றிக்கொடியை எட்டிப்பிடிக்க முடியும்.*
*எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைத்து வாழ்வது தான் அற்புதமான வாழ்வு.*
*பலருக்கு உதவி செய்வது புண்ணியம். யாருக்கும் மனதால் கூட கெடுதல் நினைக்காமல் இருப்பது சிறந்த புண்ணியம்.*
*கடவுளிடம் கேட்க வேண்டியதை கேளுங்கள்*
*ஆனால்
அவர் கொடுப்பதைப் பெற்றுக்கொள்ள
தயாராய் இருங்கள்.*
*சொன்ன சொல்லையும் எரிந்த கல்லையும் திரும்ப அழைக்க முடியாது, ஒரு துளி மையிலிருந்து பிறக்கும் கருத்துக்கள் பல்லாயிரம் பேரை சிந்திக்க வைக்கும்.*
*தவறு செய்பவர்களை
காப்பாற்றுவது கடவுள் இல்லை.*
*"பணம் தான்"*
*பாராட்டுப் பெற
முயற்சி
செய்யாதீர்கள்.*
*திறமையை
வெளிப்படுத்த
முயற்சி செய்யுங்கள்.*
*பாராட்டு
தானாகவே உங்கள்
காலடியில் விழும்.*

No comments:

Post a Comment