Wednesday 23 August 2023

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 75 இல் தடம் பதிக்கும் மாமனிதர், எங்கும் எப்போதும் புன்னகை, வளரும் தலைமுறைக்கு தான் கற்ற ஞானத்தை வழங்கி மகிழும் பேருள்ளம், மிக உயர்ந்த நிலையில் இருந்த போதும் தான் ஏற்ற பணிகளைப் பாங்காய் செய்திடும் ஆன்மீகச் செல்வர், பிள்ளையார்பட்டியின் மேன்மைக்கும் சிறப்புக்கும் நாளெல்லாம் சிறப்புச் சேர்த்திடும் பண்பாட்டுப் பெருமகன், விகாஸ் ரத்னா பிச்சை குருக்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு வாழியவே.

 


No comments:

Post a Comment