Saturday 9 January 2021

ஆழ்ந்த இரங்கல்.

 ஆழ்ந்த இரங்கல்.

எண்ணுக தமிழில்
எழுதுக தமிழில்.
என தன் வாழ்நாள் முழுவதும் அன்னைத் தமிழுக்கு அரும்பணி ஆற்றிய முதுபெரும் தமிழ் உணர்வாளர், கலைத் தந்தை கருமுத்து தியாகராஜன் செட்டியார் நடத்திய மீனாட்சி ஆலையில் இருபது ஆண்டுகள் விற்பனைப் பிரிவில் பணியாற்றி பின்னர் மதுரை கே கே நகரில் கங்கை காவிரி நூல் வணிக நிறுவனம் நடத்தியவர், மதுரை நகரத்தார் சங்கத்தின் மேனாள் செயலாளர், மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் ஆண்டுதோறும் இளம் தலைமுறையினர் கற்றறிந்திட ஏழிளந்தமிழ் (ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலகநீதி) போட்டிகள் நடத்தி செம்மொழித் தமிழுக்கு அணி சேர்த்திட்ட அண்ணன், நெற்குப்பை இராம. விஸ்வநாதன் அவர்கள் தனது கே கே நகர் இல்லத்தில் இறைவன் திருவடி அடைந்த செய்தி அறிந்து கவலையுற்றேன்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி
விசு. சொக்கலிங்கம் அவர்களின் தந்தையார்.
அவர்களின் இறுதிச் சடங்குகள் ஒத்தக்கடை சிவமடத்தில் நாளை காலை நடைபெறுகிறது.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். - மனிதத்தேனீ


No comments:

Post a Comment