Saturday 16 January 2021

நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

 நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

*உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணுங்க.. அவங்க பண்றாங்க, இவங்க பண்றாங்க என்று உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம்..*
*கண்டதையெல்லாம் மனதில் போட்டுக் கவலைப்படாதீர்கள். பிறருடன் அவசியம் இல்லாமல் போட்டி இடுவதைத் தவிர்த்து உங்களுடனே போட்டி இடுங்கள்.நீங்கள் நீங்களாகவே இருங்கள்..*
*இரண்டு வெவ்வேறு குருக்களின் சீடர்கள் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்கள்..*
*ஒரு சீடன் தனது குருவின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.*
*"என் குரு மாயா ஜாலங்களின் மன்னர். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படிப் பல அதிசயங்களைச் செய்வார்.*
*உன் குரு என்ன செய்வார்?”, என்று மற்ற சீடனிடம் கேட்டான்.*
*அதற்கு அந்த சீடன்,,,*
*"எனது குரு ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார்’’.*
*நீ சொல்வது போல் எதுவும் என் குரு செய்ததை நான் இதுவரை பார்த்தது இல்லை..*
*எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என அவரிடமே விசாரித்து விட்டு வருகிறேன் என்றான்.*
*அடுத்த நாள் இரண்டு சீடர்களும் சந்தித்துக் கொண்டார்கள்.. ''என்ன உன் குருவிடம் விசாரித்து வந்தாயா? என்று கேட்டான்.*
*ஆமாம், என் குருவிடம், உங்களுக்கு என்னென்ன மாயஜாலங்கள் தெரியும் என்று கேட்டேன்.*
*அதற்கு அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பது தான் எனது அதிசயம்” என்று என் குரு சொன்னார்.*
*மற்றும், ''சாதாரண மனிதனாகவே இரு. அதுதான் உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்'' என்றார் என்றான்..*
*மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டாலும். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.*
*மற்ற மனிதர்களைத் திருப்திப்படுத்துவது இயலாத செயல்.. ..*
*எளிதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் குறிக்கோளை அடைவதை விட்டு விட்டு எட்ட முடியாத இலக்குகளைக் குறித்து கனவு காணுவதை நிறுத்துங்கள்..*
*வாழ்வை முற்றிலுமாக வாழுங்கள்:...*
*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*
*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்.

No comments:

Post a Comment