Wednesday 27 September 2023

எதுவும் நிரந்தரமல்ல . .

 எதுவும் நிரந்தரமல்ல . .

*சில நேரங்களில்
நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும்
சரியான நேரத்தில்
எதிர்பார்த்தபடியே நடக்கலாம்.*
*சில நேரங்களில்
நடக்காமலும் போகலாம்.*
*எந்த நிலையிலும்
சோர்ந்து விடாதீர்கள்.*
*வாழ்வில் எல்லோருக்கும்
எதிர்பார்க்கும் அனைத்தும்
எதிர்பார்த்த நேரத்தில்
எதிர்பார்த்தபடியே நடப்பதில்லை.*
*ஆனாலும்
சிலர் சோர்ந்து விடாமல்
மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.*
*காரணம்
அவர்கள் தன்னைவிட
தன்னைப் படைத்தவனின் திட்டத்தை முழுமையாக நம்புகின்றனர்.*
*முழுமையாக இறைவனிடம் சரணடைந்த பின்பு நடக்கும்
அனைத்தும் நல்லதாகவே தெரியும்.*
*உங்கள் வாழ்வில்
உங்கள் திட்டத்தை விட
உங்களைப் படைத்தவனின்
திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.*
*முழுமையாக
இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.*
*நீங்கள் நினைப்பதை விட
மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்!*
*வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் நம்பிக்கையுடன் இருங்கள்.*
*படைத்தவன் மனது வைத்தால் அனைத்தையும் மாற்றுவதற்கு
ஒரு நொடி போதும்.*
*உங்கள் வாழ்வில்
உங்கள் கடினமான சூழ்நிலைகள் எதுவும் நிரந்தரம் அல்ல.*
*அனைத்தும் நிச்சயம் மாறும்.*
*ஒவ்வொரு நொடியிலும் நம்பிக்கையுடன் நகர்ந்து செல்லுங்கள். *
*உங்கள் நம்பிக்கை
உங்கள் வாழ்வை
மிகச் சிறப்பாக மாற்றும். *
*இறை அருளால்
உங்கள் வாழ்வில்
நீங்கள் விரும்பிய மாற்றங்கள்
ஏற்பட்டு மிகச் சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்துகள்*

No comments:

Post a Comment