Tuesday 19 September 2023

தராசும் எடைக் கல்லும் . .

 தராசும் எடைக் கல்லும் . .

*வார்த்தைகளின் கூர்
செடிகளின் வேர் போல
வெளியே தெரியாது.
ஆனால் வேலை செய்யும்.*
*யாரையும் குறைவாக
எடை போடாதீர்கள்.
ஏனென்றால் அவர்கள்
தராசும் அல்ல.
நீங்கள் எடைக் கல்லும் அல்ல.*
*உங்களைப் புரிந்து கொண்டவரிடம் உங்கள்
தேவையைச் சொல்லுங்கள்.
உங்கள் வார்த்தைகளை
மதிப்பவரிடம் உங்கள்
கனவுகளைச் சொல்லுங்கள்.*
*உங்கள் மீது
அன்பும்,
அக்கறையும்
கொண்டவரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள்.*
*உங்களை மதிப்பவரிடம்
தாழ்ந்து பேசுங்கள். உங்களை மிதிப்பவரிடம்
வாழ்ந்து பேசுங்கள்.*
*சிதறாத வார்த்தை தான்
சீரான வாழ்க்கையைத் தரும்.*
*யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ,
யார் அறிவாளியோ
அவர்கள் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள்,
அனுசரித்துப் போவார்கள்,
பொறுத்துப் போவார்கள்.*
*விட்டுக்கொடுக்கும் குணமும் அனுசரித்துப் போகும் மனசும் இருந்தால் வாழ்க்கை எப்போதும் சுகந்தான்.*
*அன்பு மட்டும் தான்
உலகில் நிரந்தரமானது.
அதை உண்மையாக்குவதும் பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.*
*அழகாய்ப் பேசும் பல வரிகளை விட அன்பாய்ப் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்.*
*உங்களுக்கு உதவ உங்கள் மூளையைப் பயன்படுத்துங்கள்,
*மற்றவர்களுக்கு
உதவ உங்கள்
இதயத்தைப் பயன்படுத்துங்கள்.*

No comments:

Post a Comment