அறிவுரை அறியாமை . .
வசதி உள்ளவனுக்குக்
கொடுக்கும் பரிசு பயனற்றது,
நோய் உள்ளவனுக்குக் கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.
கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது உணர்ந்து கொள்ளுங்கள்.
நம்பிக்கைத் துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்களை விட்டு விலகியிருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
எல்லாக் காரியங்களிலும் கொள்கைகளிலும் பிடிவாதமாக இருக்காமல் வளைந்து நெளிந்து
வாழக் கற்று கொள்ளுங்கள்.
அறியாமையை விடக்
கொடிய எதிரி இல்லை.
கோபத்தை விடக் கொடிய நெருப்பு இல்லை
உணர்ந்துகொள்ளுங்கள்.
இருபது ரூபாய் பிச்சைக்காரனுக்குப் போட யோசிக்கிற நாம
அதையே ஹோட்டல்ல சர்வருக்கு
டிப்ஸா கொடுக்குறோம்.
யோசியுங்கள்.
கடவுளைப் பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும்
நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தைப் பார்த்துட்டு வரோம். யோசியுங்கள்.
ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும்
ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கித் தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா
லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்.
யோசியுங்கள்.
No comments:
Post a Comment