Monday 25 September 2023

மதுரையில் யோகா பயிற்சிப் பட்டறை.

 மதுரையில்

யோகா பயிற்சிப் பட்டறை.
மகாத்மா காந்தி யோகா நிறுவனம் & திருமூலர் மற்றும் பதஞ்சலி ஆசிரமம் ஸ்கூல் ஆப் யோகா (தபஸ் யோகா), இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு மாநிலப் பிரிவு இணைந்து நடத்திய யோகா பயிற்சிப் பட்டறை இன்று காலை மதுரை தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் யோகா கலைச் செம்மல், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் த. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தபஸ் யோகா நிறுவனர் வழக்கறிஞர் பா. ஜெயசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார்,
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
யோகம் தரும் நலன்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சர்வதேச யோகா பேராசிரியர் முனைவர் இரா. இளங்கோவன்
விழா பேருரை ஆற்றி பங்கேற்பார்கள் பயன்பெறும் வகையில் இரண்டு அமர்வாக பயிற்சியளித்தார்.
யோகாவனம் நிறுவனர் திருமதி செ. பாரதி தொகுப்புரை ஆற்றிட தொடக்க விழாவில் மகாத்மா காந்தி யோகா நிறுவன இயக்குநர் கே பி கங்காதரன் நன்றி கூறினார்.
நிறைவு விழாவில் மகாத்மா காந்தி யோகா நிறுவன முதன்மை ஆசிரியர் வே. சங்கர் கணேஷ் நன்றி கூறினார்.
மிக நேர்த்தியான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
முற்றிலும் வணிக நோக்கமின்றி சமூக அக்கறையுடன் நடந்த இந்நிகழ்வில் முன்னூறுக்கும் அதிகமானோர் பங்கேற்றுப் பயன் பெற்றனர்.





























No comments:

Post a Comment