Friday 22 September 2023

தனித்துவம் .

 தனித்துவம் .

*தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும்,*
*அதன் நெருப்பு
மேல் நோக்கி எரிந்துக்
கொண்டிருப்பது போல்,*
*உயர்ந்த குணத்தை
உடையவர்களைக் கீழ்ப்படுத்த முயன்றாலும் முடியாது. *
*அசுர பலமாகவே இருந்தாலும்,
சில இடங்களில் கட்டுப்பட்டுத்
தான் இருக்கணும்.*
*மற்றவர்கள்
சொல்வதை வைத்து ஒரு நபரை மதிப்பிட வேண்டாம்.*
*பிறரிடம் எப்படியோ ஆனால்
தங்களிடம் உண்மையாக அவர் இருக்கலாம்.*
*ஏனெனில், பனிக்கட்டியை உருகச்செய்யும் அதே
சூரியன் தான் களிமண்ணைக் கடினப்படுத்துகிறது. *
*தனித்துவம்
உருவங்களில் அல்ல
செயல்களில் *
*நீ யாரைச் சந்திக்க வேண்டும்
என்பதை காலம் முடிவு செய்கிறது.*
*உன் வாழ்க்கையில் யார் இருக்க வேண்டும் என்பதை
உன் மனது முடிவு செய்கிறது.*
*உன்னுடன் யார் இருக்க முடியும் என்பதை உன்
நடத்தை முடிவு செய்கிறது.*
*கட்டுப்பாடுகள் இல்லாமல்
கட்டவிழ்க்கப் பட்ட மாடு நிலத்தைச்
சேதம் தான் படுத்தும் *
*நம் மனமும் கட்டுப்பாடு இல்லை எனில் வாழ்க்கையும் சேதமடையும்.*
*என்ன தான் வாழ்க்கைத்
தத்துவங்களைப் படிச்சாலும்
கேட்டாலும்.*
அதனருமை புரிவதில்லை,
நாம பட்டுத் திருந்தும் வரை.*
*இன்று நீங்கள்
இருளில் வாழலாம்.
ஆனால் நாளை
நிச்சயம் ஒளியைக் காண்பீர்கள்.*
*தைரியமாக இருங்கள்
நம்பிக்கையோடு வாழுங்கள்.*
*எது தேவையில்லை என்று முடிவெடுத்து விட்டால்
எது தேவை என்று தெரிந்துவிடும் .*
*வாழ்வில் உயர்ந்த லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்.*
*அதற்காகவே உன்னை மனிதனாக கடவுள் படைத்து இருக்கிறார்.*
*குறிக்கோள் இன்றி
வெறுமென வாழ்வதில் அர்த்தமில்லை.*
*என்றும் மறக்க கூடாத
இரண்டு விசயம்.
*மற்றவர்
உழைப்பில் வாழக் கூடாது.
மற்றவர்
சிரிக்கும் படி வாழக்கூடாது.*
*காக்கையின் எச்சத்தில்
இருந்து முளைத்த
விதைகள் கூட,
கடவுள் தங்கும்
கோவில்கள் ஆகின்றன.*
*நமது மனம் தான்
நம்மை வீழ்த்தக்கூடிய
மிகப்பெரிய ஆயுதம்.
அது தெளிவாக
இருந்தால்
நம்மை
யாராலும்
வீழ்த்த முடியாது*

No comments:

Post a Comment