Tuesday 26 September 2023

ஏமாற்றமா ஏக்கமா . .

 ஏமாற்றமா ஏக்கமா . .

இன்பங்களும் துன்பங்களும் கலந்ததுதான் வாழ்க்கை.
வாழ்க்கை என்பது
இன்பம் மட்டும் துன்பமா.
சிலர் இங்கு பாசத்துக்காக ஏங்குகின்றனர்.
சிலர் பணத்திற்காக ஏங்குகின்றனர்.
சிலர் பதவி, பொன், பொருள் ஆகியவதிற்காக ஏங்குகின்றனர்.
சிலர் உடுத்த உடை இன்றி ஏங்குகின்றனர்.
சிலர் உண்ண உணவின்றி ஏங்குகின்றனர்.
இப்படி ஏங்கி ஏங்கியே
சிலரின் வாழ்கை முடிந்து விடுகின்றது. வாழ்கை என்பது ஏக்கமா.
பணக்காரனோ பணம் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுகிறான்.
ஏழையோ பணமே
தம்மிடம் இல்லை என்று
பணத்தைத் தேடி ஓடுகிறான்.
வாழ்கை என்பது பணமா
சிலர் வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று ஓடுகின்றனர். வாழ்க்கை என்பது சாதனை செய்வதா.
சிலர் வாழ்க்கைக்கு நல்ல கல்வி,
அறிவு வேண்டும்(அவசியம் ) என்கின்றனர். வாழ்க்கை என்பது கல்வியும் அறிவும் மட்டும் தானா.
சிலர் மீது நம்பிக்கை வைத்தே
ஏமாந்து போகின்றோம் நம்மில் சிலர். வாழ்கை என்பது ஏமாற்றமா.
சென்றவர்களை எண்ணியே மனமுடைந்து
கண்ணீர் விடுகின்றோம்.
வாழ்க்கை என்பது கண்ணீர் வடிப்பது மட்டும்தானா.
இங்கு நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு பாடத்தினை காப்பிக்கின்றனர்.
வாழ்க்கை என்பது பாடம் கற்பதா.
சிலர் கனவுகளை துரத்திச் செல்ல இயலாமல் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது கனவு மட்டும் தானா.
இருபதிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர் இங்கு உண்டு, அறுபதிலும் இங்கு வாழ்க்கையைப் பெற்றவரும் உண்டு.
வாழ்கின்ற வாழ்க்கையை
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

No comments:

Post a Comment