Monday 29 May 2023

ஒப்பீடுகளால் பயன் இல்லை.

 ஒப்பீடுகளால் பயன் இல்லை.

ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்தது.
அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கைப் பார்க்கும் வரை..
அது கொக்கைப்
பார்த்து சொல்லியது.
நீ வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே. கருப்பா இருக்கும் என்னை எனக்குப் பிடிக்கலை என்றது.
கொக்கு சொன்னது. நானும் அப்படிதான் நினைத்தேன், கிளியைப் பார்க்கும் வரை.. அது இரண்டு நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
காகமும் கிளியிடம் சென்று கேட்டவுடன் அது சொன்னது. உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ஆனால் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா என்றது.
உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலை சென்று மயிலைப் பார்க்க அங்கு ஆயிரக்கணக்கான . ஜனங்கள் மயிலைப் பார்க்க காத்திருக்க, காகம் நினைத்தது .ம்ம்ம்.
இதுதான் மகிழ்ச்சி என்று.
அழகு மயிலே, உன்னைக் காண இவ்வளவு பேர். என்னைப் பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர், என்றது.
மயில் சொன்னது. அன்பு காகமே. நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று.
ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்கச் செய்கிறது.
இந்த மிருகக் காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில், காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை ..
எனவே நான் யோசித்தது நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாகச் சுற்றி வரலாமே, என்றது.
இதுதான் நமது பிரச்சினையும்...
*"நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ளச் செய்கிறோம்."*
"நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை."
"அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை." இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்துச் செல்கிறது.
"ஒப்பீடுகளால்
யாதொரு பயனும் இல்லை."
உங்களை முதலில் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
"உங்களை உங்களைவிட யாரும் அதிகமாக நேசிக்க முடியாது".
*"இறைவனின் படைப்புகள் அனைத்தும் உயர்ந்தவை
ஒவ்வொரு விதத்தில்."*

No comments:

Post a Comment