Friday 12 May 2023

நாம் நாமாக வாழ வேண்டும்.

 நாம் நாமாக வாழ வேண்டும்.

குயிலுக்கு மயிலாக ஆசை
அதன் அழகைக் கண்டு.
மயிலுக்கு குயிலாக ஆசை
அதன் குரலைக் கண்டு
நாய்க்கு நரியாக ஆசை .
அதன் அறிவைக் கண்டு
நரிக்கு நாயாக ஆசை அதன்
நன்றியைக் கண்டு.
சிறுத்தைக்கு சிங்கமாக ஆசை
அதன் தலைமையைக் கண்டு. சிங்கத்திற்கு சிறுத்தையாக ஆசை
அதன் வேகத்தைக் கண்டு.
ஆசை இதனால்.
குயில் தன் குரலை மறந்தது.
மயில் தன் அழகை மறந்தது.
நாய் தன் நன்றியை மறந்தது.
நரி தன் அறிவை மறந்தது.
சிங்கம் தன் தலைமையை மறந்தது.
சிறுத்தை தன் வேகத்தை மறந்தது.
பிறர் சிறப்பைப் பார்த்து
தன் சிறப்பை மறைக்கிறான்
ஏன் சிரிப்பை கூட மறக்கிறான்
மனிதன் ஆசையினால்.
மனிதா நீ நீயாக வாழக் கற்றுக்கொள் பிறருக்காக வாழ ஆசைப்படு தவறில்லை..
பிறராக வாழ ஆசைப்படாதே.
அப்படி ஆசைப்பட்டு உன்னை
நீ இழந்து விடாதே..
ஏதாவது ஆசையினால் தன்னிலை இழக்காதே எப்பொழுதும்.

No comments:

Post a Comment