Tuesday 30 March 2021

புதிய சிந்தனை

 புதிய சிந்தனை

புதிய முயற்சி
புதிய பாதை
செய்ததையே திரும்பத் திரும்பச் செய்து வேறு முடிவை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.
மாடுகளில் இரண்டு வகையுண்டு
ஒன்று செக்கு மாடு
மற்றது வண்டி மாடு
இந்த செக்கு மாட்டை மாற்றி வண்டியில் கட்டிவிட்டால் அது சாலையில் நேராகச் செல்லாமல் தனது வீட்டையே சுற்றிச் சுற்றிச் வரும் என்பார்கள்.
மனித சோம்பலின் மனோபாவமும் அப்படித்தான் மாற்றிப் போகிறது
பெரும்பாலான மனிதர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கின்றன.
இதைத்தான் பாரதி *தேடித் தினம் சோறு தின்று உறங்கும் இந்த வேடிக்கை மனிதரென* பாடினான்.
இதுவும் ஒரு சோம்பல் தான் அதனால் தான் அடிக்கடி *“மாத்தி யோசி”* என்றார்கள்.
மனித செயல்களிலும் மாற்றும் பயிர் போல மாறுபட்ட முயற்சிகளும் வேண்டும்.
இதைதான் இந்த பாமர மக்களின் சோம்பல் என்கிறார்கள்.
புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்.

No comments:

Post a Comment