மகிழ்ச்சி என்பது அன்று
மலர்ந்த மலர் போல.
ஆனால்
ஞாபகங்கள் என்பது என்று நினைத்தாலும் மனம் கமழும் வாடாத மலர் போல
என்றும் மணக்கும் தன்மை கொண்டது
ஒரு நதி போல நகர்ந்து விட்ட வாழ்வை
திரும்பிப் பார்த்தால் ஆங்காங்கே எத்தனையோ ஈர நினைவுகள் இருப்பது போல
எப்படி ஒர் ஆற்றுநீர் சென்ற பாதையில் ஈரம் இருக்கும்போது
அந்த உணர்வு ஒருவித சுகத்தைக் கொடுக்குமோ.....
அதுபோல.....
ஒவ்வொரு நாளின் கடந்து சென்ற நேரத்தை நினைத்துப் பார்த்தால்
அதில் சுகானுபவம் உணர்ந்தால்
அன்றைய நாள் சரியான நாளாக வாழ்ந்திருக்கிறோம் என்று அர்த்தம்.
No comments:
Post a Comment