Monday 8 March 2021

திருநகர் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதியுடன் கட்டணமின்றி கொரோனா தடுப்பூசியைப் போடுவதற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பயனுள்ளது. மதுரை திருநகரில் 98 ஆவது வார்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது மிக எளிதாக உள்ளது. 8 ஆவது பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளது. எந்தக் கட்டணமும் இல்லாமல் மக்கள் நலன் கருதி நடைபெறும் மகத்தான பணி. காலை 9 மணிக்குச் சென்றால் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்தில் திரும்பி விடலாம். எங்கள் வீட்டில் அனைவரும் இங்குதான் போட்டுக் கொண்டோம். இது அவசியம் மிக அவசரம். பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் இனி நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு இந்தத் தடுப்பூசி அவசியம். வாழிய நலம். - மனிதத்தேனீ

No comments:

Post a Comment