Thursday 25 March 2021

பிறர் மகிழ்வதைப் பார்த்து தீர்மானித்து விடாதீர்கள்.

 பிறர் மகிழ்வதைப் பார்த்து

தீர்மானித்து விடாதீர்கள்.
நினைத்துக் கூட
பார்க்க முடியாத
சோகங்கள் பலஉண்டு.
எல்லோரையும் மகிழ்ச்சியாக
வைத்துக் கொள்ள நினைப்பவர்கள்..
எப்போதும் மகிழ்ச்சியாக
இருந்ததில்லை..
“மகிழ் வித்து மகிழ்”
பொய்யாய்ப் போகிறது.
உன்னுடைய உழைப்பும்
சொற்களும் உனக்கும் பிறருக்கும்
பயன் உள்ளதாக இருந்தால்.
மகிழ்ச்சி தானாக வரும்.
மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக
மனிதன் தவறாக எண்ணுகிறான்.
அது அவன் மனதில்
தான் இருக்கிறது.
நேற்று நடந்தவற்றை உங்களால்
மாற்ற முடியாது.
நாளை நடப்பதை தடுக்க முடியாது.
இன்றைய பொழுதில்.
இக்கணத்தில் மகிழ்ச்சியாக
வாழுங்கள்.
அது தான் எல்லா
துன்பங்களுக்கும்
ஒரே தீர்வு.
உன்னை யாரும் புகழும்
போது மகிழ்ச்சி அடையாதே.
அதேபோல.
உன்னை இகழும் போது
கவலையும் கொள்ளாதே.
புகழையும்.. இகழையும்.
சமாக கருதுபவரே
மன அமைதியுடன்
வாழ முடியும்.
நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி
என்பது இடங்களை பொறுத்து
அமைவது இல்லை.
நம்மோடு
பயணிக்கும் மனிதர்களை
பொறுத்தே அமைகிறது.
மண் குடிசையில் வாழ்ந்தாலும்
மனதிற்கு மகிழ்ச்சியாக
தான் இருக்கும்.
மனதிற்கு
பிடித்தவருடன் வாழ்ந்தாலும்.
உன் மகிழ்ச்சியை
அடுத்தவர்களிடம்
தேடாதே.
அது உனக்கு தனிமையை
மட்டுமே தரும்.
உன் மகிழ்ச்சியை
உனக்குள் தேடு
மகிழ்ச்சியாய் இரு.
எதிர்பார்த்த போது
கிடைக்காத எதுவும்.
அதன் பிறகு எத்தனை
முறை கிடைத்தாலும்
மகிழ்ச்சியை
கொடுப்பதில்லை.
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில்
வாழ நினைப்பதை விட
நீ இருக்கும் இடத்தில்
மகிழ்ச்சியை உண்டாக்கு
உன் வாழ்க்கையில்
நிறைவு இருக்கும்.
உண்மையான மகிழ்ச்சி என்பது.
நம் மகிழ்ச்சி யாரையும்
கவலையடைய
செய்யாதிருப்பதாகும்.
நம்மைச் சுற்றி
ஆயிரம் உறவுகள்
இருப்பதை விட
நம்மையும்.
நம் உணர்வுகளையும்.
மதிக்கிற உறவு இருந்தாலே
போதும் நாம் மகிழ்ச்சியாக
வாழ்வோம்.
மகிழ்ச்சியில்
கை குலுக்க மறந்தாலும்
சோகத்தில்
கண் துடைக்க வரும்
கரங்கள் தான்
உண்மையான உறவுகள்.
உயிர் இருக்கும் வரை
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்..
என்பதை விட..
நிம்மதியாக வாழ வேண்டும்
என்பதே முக்கியம்..!

No comments:

Post a Comment