Monday 28 December 2020

மாநகர் மதுரையில்புதிய உதயம்....

 மாநகர் மதுரையில்

புதிய உதயம்....
மதுரை பேலஸ் ரோடு நட்சத்திரா பிரிண்டர்ஸ் ( மல்டி கலர்) நிறுவனத்தில் இன்று புதிதாக பேன்சி திருமண அழைப்பிதழ் மற்றும் அனைத்து விதமான கார்டுகள் விற்பனைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிட தெய்வநெறிக் கழகத் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி ஆசி வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்வில் மடோபா நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அச்சக நண்பர்கள், உறவினர்கள், பல்துறை நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
கடந்த 21 வருடங்களாக அச்சகத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிவரும் நிறுவனம் இன்று புதிய வணிகத்தில் தடம் பதிக்கின்றது.
அதன் உரிமையாளர் ஓய்வறியா உழைப்பாளி, தொடர் உழைப்பினால் உயர்ந்து வரும் அருமை இளவல்
பி. கிருஷ்ணகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.
வாழிய தொழில் மேன்மை.










No comments:

Post a Comment