Thursday 31 December 2020

தமிழுக்கும் தமிழர்களுக்கும் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி வரிகள்.

 தமிழுக்கும் தமிழர்களுக்கும்

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி வரிகள்.
“கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே..”
கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல் இதுதான் என்று இத்தனை நாள் எண்ணிக் கொண்டிருந்தேன்...
எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன்...!
ஆனால் இன்று கண்ணில் பட்ட ஒரு தகவல் , என் எண்ணம் தவறென எடுத்துக் காட்டியது..!.
சினிமாவுக்காக கண்ணதாசன் கடைசியாக எழுதியது அந்த “மூன்றாம் பிறை” பாடல்தான்...!
ஆனால் ..தமிழுக்காக ..தமிழர்களுக்காக கண்ணதாசன் எழுதிய கடைசிக் கவிதை...
இதோ..அது பற்றிய தகவல்...
உடல் நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கண்ணதாசன்...
அந்த சமயத்தில் ..அமெரிக்காவில் வாழும் தமிழ் அன்பர்கள் , தங்கள் குழந்தைகளோடு கண்ணதாசனைக் காண வந்தார்களாம்...
அந்தக் குழந்தைகளோடு கண்ணதாசன் தமிழில் உரையாட ..அவருக்கு அதிர்ச்சி...!
வந்த எந்த தமிழ் குழந்தைக்கும் தமிழில் பேசத் தெரியவில்லை...!
கண்ணதாசன் அந்த அமெரிக்க தமிழர்களிடம் ஆழ்ந்த மன வருத்தத்துடன் கேட்டாராம்...
“தமிழர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழை சொல்லித் தர வேண்டாமா..?”
இப்படிக் கேட்ட கண்ணதாசன் , அமெரிக்க மருத்துவமனையில் .. அந்த வேளையிலேயே எழுதிய அழகிய கவிதை ஒன்று...!
“மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு
மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்
தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற
தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!”
# இதுவே கண்ணதாசனின் கடைசிக் கவிதை...!
# ஆம்...கண்ணதாசன் தமிழுக்கு , தமிழர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமையை , கவிதையாய் எழுதி தன் கணக்கை முடித்துக் கொண்டு போய் விட்டார்...!
"அவன்தான் மனிதன்" படத்திற்காக கண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன...!
“கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா..
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...“
நன்றி வெங்கட்

No comments:

Post a Comment