Saturday 26 December 2020

நற்சிந்தனை இலவச நூல் வெளியீட்டு விழா.

 நற்சிந்தனை

இலவச நூல் வெளியீட்டு விழா.
இன்று மாலை திருநகர் எங்கள் இல்லத்தில் திருநகர் பேரூராட்சி, வீடு கட்டும் சங்கம், சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, டவுன் கிளப் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 25 ஆண்டுகள் தலைவராகப் பணியாற்றிய எங்கள் தந்தையார்
கே. ராமன் செட்டியார் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவைப் போற்றிடும் வகையில், விஜயா பிரிண்டர்ஸ் நிறுவனர் நினைவு மலர் நற்சிந்தனை எனும் நூலாக வெளியிடப்பட்டது.
இலவச நூலினை பொறியாளர்
சொ. ராம்குமார் வெளியிட
எஸ். சரவணன் பெற்றுக்கொண்டார்.
அசாதாரண சூழ்நிலை காரணமாக நிகழ்ச்சியில் திருநகரில் உள்ள எங்கள் உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற எளிய நிகழ்வு.
-மனிதத்தேனீ



No comments:

Post a Comment