Monday 14 December 2020

விரும்புவது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்புங்கள்.

 விரும்புவது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்புங்கள்.

நமக்கு வெற்றியும் மகிழ்வும் தரக்கூடிய
மன யுத்திகளில் மிகப்பெரிய உத்தி -
"விரும்புவது கிடைக்காவிட்டால்
கிடைத்தை விரும்புங்கள் !"
"வாழ்க்கையில் எல்லாமே நாம் நினைத்தபடி நடப்பதில்லை .இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்வது அவசியம் ."
ஒன்றை நாம் விரும்புகிறோம் , அதற்காக முயற்சிக்கிறோம் -அது கிடைத்து விடும் போலவும் தோன்றுகிறது .கடைசி நேரத்தில் கை நழுவி போய்விடுகிறது .ஏமாற்றத்திற்கு ஆளாகிறோம் .
உணர்வு என்கிற அளவில் அது சரிதான் .ஆனால் அந்த ஏமாற்றத்தைச் சுமந்து கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை .
நாம் விரும்பியது கிடைக்காத சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும் . அதற்காக அதையே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது .
எது கிடைக்கிறதோ அதை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும் .
விருப்பு ,வெறுப்பு எல்லாம் முற்றிலும் மனதைப் பொறுத்த விஷயம் .பார்க்கப் போனால் வெறுப்பது ஓர் எதிர்மறை குணம் .
நாம் ஆசைபட்டால் எதன் மீதும் நம்மால் விருப்பம் செலுத்த முடியும் .உதாரணமாக , ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய வேண்டுமென்று நீங்கள் ஆசைபடுகிறீர்கள் . அதை உங்களால் செய்ய முடியாமல் போய் விடுகிறது .
இன்னொரு தொழில் இயற்கையாக உங்களுக்கு அமைகிறது .அதை நீங்கள் எதற்காக வெறுக்க வேண்டும் ?.
"செய்கின்ற வேலை எதுவானாலும் அதை விருப்பத்துடன் செய்வதற்கு நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும் .விரும்பிச் செய்கின்ற ஒரு காரியத்தைத்தான் நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும் ."
திறமையினையும் அப்போதுதான் வெளிப்படுத்த முடியும்.
விரும்பியது கிடைக்காத போது, கிடைத்ததை விரும்புவதுதான் நடைமுறைச் சாத்தியமானதும் , வெற்றியினை அளிக்கக்கூடியதும் ஆகும்.
"விரும்புகின்ற படியே எல்லாம் நடக்காது என்கிற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு நமக்கு கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திகொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும். பாரமாகத் தோன்றாது ."
முயற்சித்துத் தான் பாருங்களேன்,
வாழ்வு
இனிமையாக
ும்.

No comments:

Post a Comment