அரிமா முன்னோடி, அருமைச் சகோதரர் வ. வயிரவன் என்ற பாலு அவர்களின் வாழ்த்து.
*வாழ்த்து*
விஜயா அச்சகம்
தடம் பதிக்கிறது
74-ம் ஆண்டில்!
அச்சு அகம் பதிந்து
உச்சி முகர்ந்து
மெச்சிப் பேசி
நிமிர்ந்த மிடுக்குடன்
வடம் பிடிக்கும் நன்னடை!
கலர் கலராய்
மை இருக்கும்,
பொய் யில்லா
மெய்யிருக்கும்
அச்சிலும்,பேச்சிலும்!!
கடிகாரம் தாமதமாகலாம்
விஜயா அச்சகத்தின்,
நிர்வாக நேரம் தவறாது
கொடுக்கலிலும்,வாங்கலிலும்!!
அழுத்தமான எழுத்துமுண்டு!
சிரிப்பும்,சமூக சிந்தனையுடைய,
சிந்திக்கவைக்கும்
பேச்சுமுண்டு!
தொழிலாளிக்குள்ளே
முதலாளி இருப்பதுணர்ந்து,
அன்பளிப்பு அள்ளித்தருவார்!!
பள்ளத்தூரின் நல்மனதார்
*ராமன் செட்டியாரின்*
நேர்மை வழிகாட்டலில்
சோர்வறியா உழைப்பாளி,
செயலால் ஜொலித்து
*மனிதத்தேனீ* யாய்
வலம்வரும் அண்ணன்
*ரா.சொக்கலிங்கம்*
அவர்களின்,
*விஜயா பிரிண்டர்ஸ்*
நிறுவனம்,
மென்மேலும் வளர்ந்தோங்க,
நெஞ்சம் நிறைந்த
வாழ்த்துக்கள்
. வாழ்த்தின் மகிழ்வில்,
வ.வயிரவன்,
No comments:
Post a Comment