Friday 18 September 2020

நாமும் பலி கொடுப்போம்

 நாமும் பலி கொடுப்போம்.

தலையை வெட்டினால் தான் பலி என்பதல்ல; நாம் அன்றாடம் நம் சுயநலத்துக்காக எத்தனை பேரின் மகிழ்ச்சியைப் பலி கொடுகின்றோம் என்று கவனித்துப் பாருங்கள்..
கோபம்,காழ்ப்பு, விரோதம் போன்ற நம் வீண் அகங்காரங்களை நாமும் பலி கொடுப்போம்.
ஒரு பலி கொடுக்கும் தீவிரத்தோடு, உங்கள் உயிர்ச் சக்தியை முழுமையாக செயல்களில் செலுத்தி அதில் ஈடுபடுங்கள்.
ராமகிருஷ்ணன பரமஹம்சரின் வார்த்தைகள் மீது ஒருவன் மிகுந்த மரியாதை வைத்து இருந்தான். அவனது படுக்கையில் ஏராளமான மூட்டைப் பூச்சிகள் இருந்தன.
”மனித உயிர்,மற்ற உயிர் என்று பிரிக்காமல், எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்கும்படி ராமகிருஷ்ணா அடுக்கடி சொல்வாரே,
தொந்தரவு செய்யும் இந்த மூட்டைப் பூச்சிகளை எப்படிக் கொல்வது என்று அவன் குழம்பிப் போனான்.
தினமும் தூக்கம் பறிபோயிற்று.
குருவிடமே கேட்கலாம் என்று உறக்க மிகுந்த களைப்புடன் அவரைத் தேடி வந்தான்..
அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு திகைப்பூட்டியது.
ராமகிருஷ்ணர் தன் பாயில் அமர்ந்து இருந்தார். அதிலிருந்த ஒவ்வொரு மூட்டைப் பூச்சியாக எடுத்து நசுக்கிக் கொண்டு இருந்தார்.
எந்த உயிரையும் காழ்ப்போ, விரோதோமோ, வெறியோ இல்லாமல் கையாளும் வரை அதில் தவறில்லை என்பதை ராமகிருஷ்ணர் தன் செயல் மூலம் அவனுக்கு தெளிவுபடுத்தினார்..
ஆம்.,நண்பர்களே.,
ஆடு , மாடுகளுக்கு உணவு தாவரம்..
சிங்கம் , புலிகளுக்கு உணவு ஆடு , மாடுகள் ..
ஒன்று அழிந்தால் தான் ஒன்று இந்த புவியில் வாழ முடியும் ,
இதுதான் இயற்கையின் நியதி ..
இருந்தாலும் உயிர்ப் பலிகளை நாம் நிறுத்துவோம்
அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்துவோம்.

No comments:

Post a Comment