Friday 11 September 2020

சீறுவோர்ச் சீறு. பாரதியார்

 சீறுவோர்ச் சீறு.

பாரதியார்
தயானந்த ஸ்வாமிகளை ஒரு அன்னிய நாட்டவர் கேட்டாராம். "ஸ்வாமி சாதுன்னா
என்ன?
இவரும் விளக்கம் சொன்னார்
அப்ப சாதுக்களுக்கு கோபமே வராதா
ஆமாம், வரக்கூடாது.
நீங்க ஒரு சாதுவா? அப்ப நான் உங்களை அடிக்கலாமா?
சுவாமி அதற்கு "அடித்தால் கோபம் வரும் என்று இல்லை. ஆனால் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்" என்றார்.
இதான் அத்து மீறுவது என்கிறது.
ஒரு சன்யாஸி ஒரு நாள் ஒரு கிராமத்தில் தங்கினார். மூன்று நாட்கள் தங்கி மக்களுக்கு
உபதேசங்கள் செய்தார். நாலாம் நாள் சன்யாஸ தர்மப்படி கிராமத்தை விட்டு
கிளம்பிட்டார். கிளம்பும்போது சாமி எந்த ஊருக்கு அடுத்து போறீங்க? ன்னு கேட்டாங்க.
இவரும் சொன்னார். சாமி அதுக்கு காட்டு வழி குறுக்கு வழியானாலும் அந்த பக்கமா
போகாதீங்க! அங்க வழில ஒரு பாம்பு இருக்கு. அது போற வரவங்களை எல்லாம்
கடிக்குது. ஆடு மாடு மேய்க்க போற பசங்கள் எல்லாரும் கஷ்டப்படுறாங்க ன்னு
சொன்னாங்க. அடப்பாவமே! அப்படியா? சரின்னு சொல்லிட்டு சன்யாஸி காட்டு
வழியாவே போனார். வழியில் பாம்பையும் பார்த்தார். நீ ஏன் இப்படி எல்லாம்
கடிச்சு துன்புறுத்தறே? உன் இரையை நீ தேடிக்கோ. இரை அல்லாததை சும்மா
கடிக்கக்கூடாது ன்னு சொன்னார். சரி சாமி அப்படியே ஆகட்டும் ன்னு அதுவும்
சொல்லிட்டு
கொஞ்ச நாள் கழிச்சு ஆடு மாடு மேக்கிற பசங்க அங்கே போனப்ப பாம்பு தொல்லை
காணலையேன்னு ஆச்சரியப்பட்டேன் அதோடு நிக்கலை. ரெண்டு நாள் கழிச்சு அது
எங்கேன்னு தேடி கண்டு பிடிச்சாங்க. கடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சு கொடுத்த
பாம்பு இப்ப ஓடி ஒளிய திண்டாட வேண்டி இருந்தது! பசங்க துரத்தி துரத்தி கல்லால அடிச்சு ஒரே கலாட்டா. இதனால பகல்ல பாம்பு வெளியே வரவே வராம ஒளிஞ்சு இரை தேடக்கூட முடியாம கஷ்டப்பட்டது.
சில வாரங்கள் கழிச்சு அதே சன்னியாசி திரும்பும் வழியில் அதே காட்டு வழியா வந்தார்
பாம்பு இருக்கிற இடம் வந்ததும் அதை நினைவு கொண்டு நண்பனே எங்கே இருக்கிறாய்
ன்னு கூப்பிட்டார். மகரயாழ் பாம்பும் சன்னியாசி குரலை கேட்டு மறைவிடத்துலேந்து வெளியே
வந்து வணங்கியது.
என்னப்பா இப்படி ஏதோ குத்துயிரும் குலையுயிருமா இருக்கே? இளைச்சு
போயிட்டியே!" ன்னு கரிசனத்தோட கேட்டார். பாம்பும் கடிக்கறதை விட்ட பிறகு மக்கள் தன்னை தேடித்தேடி அடிக்கறதை சொல்லித்து. சன்னியாசி சொன்னார், "பாம்பே! நீ நான்
சொன்னதை கொஞ்சம் தவறா புரிஞ்சு கொண்டே! நான் கடிக்காதேன்னுதானே
சொன்னேன்? சீறாதே ன்னு சொன்னேன்
அப்புறம் பாம்பு சீற ஆரம்பிச்சது. ஜனங்களும் பழைய படி அதுக்கு பயந்து அதை சீண்டறதை விட்டுட்டாங்க.
*நாமும் அந்த பாம்பை போலவேதான். எல்லா மனிதர்களையும் கண்டு ஒதுங்கவேண்டியது இல்லை. சீற வேண்டியவர்களை கண்டால் சீறித்தான் ஆகணும்.
சீறுவோர்ச் சீறு.
பாரதியார்

No comments:

Post a Comment