Monday 7 September 2020

கடத்தல்.. பலரின் முகத்திரை கிழியும்

 கடத்தல்.. பலரின் முகத்திரை கிழியும்

பிரபல நடிகையும் பெண் போராளியுமான ராகிணி திவேதி போதை மருந்து வழக்கில் கைது
😝😛
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன் படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இவர்களில் நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவி சங்கர் பெங்களூரு ஜெயநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார். ரவி சங்கர் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததும், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகை ராகிணி திவேதியும், ரவி சங்கரும் திருமணம் செய்து கொள்ளலாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்காக ராகிணி திவேதிக்கு ரவி சங்கர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை 6.30 மணியளவில் பெங்களூரு எலகங்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு 6 போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலையில் நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டார்.
சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு வந்த போது பெண்ணுரிமை, சம உரிமை, ஈயம், பித்தளை பேரிச்சம்பழம் என்றெல்லாம் வீர வசனம்
பேசியவர் இவர்தான்.
தமிழில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்த நிமிர்ந்து நில் படத்தில் ராகிணி திவேதி கதாநாயகியாக நடித்து தமிழ் நாட்டிலும் ஆக
சிறந்த போராளியானார் என்பதும் குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment