Friday 11 September 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

 பிணம் தின்னும் கழுகுகள் காத்திருப்பு..

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டம், எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் வி.விக்னேஷ் கடந்த புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டான்.காரணம்..?
பிரேத பிரசோதனைக்கு பிறகு,எலந்தங்குழி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த பிணத்தை நோக்கி,தமிழகம் முழுவதிலும் இருந்து மகிழ்சியுடன் பிணம் தின்னும் கழுகுகள் பறந்து சென்று வட்டமிட தொடங்கின.
இதை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக அந்த பிணத்திற்கு ரூ.7 இலட்சம் விலை வைத்ததோடு, மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலையும் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகம் உள்ள தொகுதி என்பதால்,அந்த கட்சியின் சார்பாக,அந்த பிணத்திற்கு ரூ.10 இலட்சம் விலை நிர்ணயம் செய்து தந்துள்ளது.
இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கட்சியின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எனும் பெரும்கழுகு சென்னையில் இருந்து பிணத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டு இருப்பதை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி கழுகுகளுக்கும், உள்ளூர் திமுக நிர்வாகிகழுகுகளுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் எழுந்து அது மோதல் போக்காக ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆதலால்,எலந்தங்குழி கிராமத்தில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமன், டிஐஜி ஆனிவிஜயா, அரியலூர் மாவட்ட எஸ்.பி ஆர்.ஸ்ரீனிவாசன் மற்றும் 500-க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் உதயநிதியின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பிணத்தை திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் எனும் கழுகுவின் பார்வையில் படவிடாமல் பாமக-எனும் கழுகு தடுத்து நிறுத்தியதுடன், பிணத்தை மாற்று வழியில் இடுகாட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டது.
அதன்பின்னர், சென்னை கழுகு ஏமாற்றாத்துடன் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் பிணம் வைக்கப்பட்டிருந்த இல்லத்திற்கு சென்று ரூ.5 லட்சத்தை விலையாக வழங்கி சில புகைப்படங்களை எடுத்து பறந்து சென்றது.
தேர்தல் முடியும் வரை எங்கே,யார் வீட்டில் பிணம் கிடைக்கும் என,இந்த கழுகுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தினம் தினம் காத்திருக்கும்..நீட் தேர்வு எழுதும் மாணவ,மாணவியரே..பெற்றோர்களே..உஷார்..அதிலும் தாழ்த்தப்பட்டவர்களே.. உஷார்!உஷார்!!
குறிப்பு;தற்கொலைதானா..?விசாரணை தேவை..

No comments:

Post a Comment