Friday 18 September 2020

திருமந்திரம் - பாடல் # 1435:-ஐந்தாம் தந்திரம் .,

 திருமந்திரம் - பாடல் # 1435:-ஐந்தாம் தந்திரம் .,

3. மார்க்க சைவம்
( சிவத்துடன் சேர்பவர் யார் )
வேதாந்தம் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மில்லாத சித்தாந்தம் கண்டுளோர்
சாதாரண மன்ன சைவ ருபாயமே.
✨விளக்கம் ✨
வேதாந்தத்தை அறிந்தவர்கள் பிரம்ம வித்தையை அறிந்தவர்கள். நாதந்தத்தை அறிந்து கொண்டவர்கள், நன்மைகள் வரும்போது துள்ளாமலும், தீமைகள் வரும் போது துவளாமலும் இருக்கும் சலனமற்ற யோகியர் ஆவர். வேதாந்தக் கொள்கையிலிருந்து மாறுபட்டச் சித்தாந்த அனுபவம் உடையவர்களும் தகுந்த வேறு ஒரு உபாயத்தால் சிவனைச் சேருவர்.
வேதாந்தம் (ஞான மார்க்கம்) கூறுவது: “வைராக்கியத்தால் சிவனைச் சென்று அடையலாம்”
சித்தாந்தம் (பக்தி மார்க்கம்) கூறுவது: “அன்பால் சிவனைச் சென்று அடையலாம் ”
எல்லா மார்க்கங்களும் ஒரே ஈசனிடம் அவன் அன்பர்களைச் செலுத்தும்.

No comments:

Post a Comment