Monday 28 September 2020

இடர்பாடுகளும் தீர்வுகளும்

 இடர்பாடுகளும் தீர்வுகளும்

இடர்பாடு என்றால் என்ன...?அதற்கு ஏதாவது வடிவம் உண்டா...?
உறுதியாகக் கிடையாது...
மனிதர்களாகிய நாம் கொடுக்கும் வடிவமும், பொருளும் தான் ஒரு நிகழ்வை இடர்பாடாக எடுத்துக் கொள்வது, ஒரு நிகழ்வை உணர்வின் மூலமாக அணுகும் பொழுது அது வழக்கமான நிகழ்வாக இருந்தாலும் அதற்குக் கொடுக்கும் பெயர் இடர்பாடுகள்..
எந்த ஒரு நிகழ்வுக்கும் இறுதி என்பது ஒன்று உண்டு என்று உறுதியாக ஏற்க வேண்டும். நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு இடர்பாடு என்று தான் பெயர் சூட்டல் வேண்டும்...
வாழ்வில் சிக்கல்கள் இல்லாதோர் எவரும் இல்லை...!
திருமணம் ஆனவருக்கும், ஆகாதவருக்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும்
ஏழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும்
சிக்கல்கள் இருக்கத் தான் செய்கிறது...
சரி..நமக்கு வரும் சிக்கல்களைத் தீர்க்க என்ன செய்வது...?
முதல் வழி சிக்கல்களைத் தீர்க்க வழி தேடுவது...!
சிக்கல்களை விலக்கி விட்டுச் செல்வது...!
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வது...
இதில் மூன்றாவது வழியே சரியானது...
இடர்பாடு எவ்வளவு பெரிதாயினும், அதனோடு ஒன்றி, உடன் வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக் கொண்டால் எந்த சிக்கல்களையும் வெல்லலாம்...
ஆம் நண்பர்களே...!
அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்றுக் கொண்டால் அங்கு சிக்கல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை...
அமைதியாக ஏற்றுக் கொள்ளும் போது உணர்சிகளுக்கு இடமில்லை...
உணர்ச்சிகள் தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய இடர்பாடுகளாக ஆக்கி விடுகிறது...
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிக்கல்களைப் பற்றியும், அறைகூவல்களைப் பற்றியும் சிந்திப்பது மிக மிக முதன்மை தான்...
ஆனால்!, அந்த முதன்மைகள் நம்மை முடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment