வாழிய இறைப்பணி.
அறப் பணிகளால் நாளும் வளரும் நகரத்தார் சமூகத்தின் இன்றைய திருப்பணி. நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயில் சுவாமி ஜெயந்திநாதருக்கு 1. 39 கிலோ தங்கக் கவசம் வழங்கிய சென்னைத் தொழிலதிபர், சியாமளா பிக்சர்ஸ் கோட்டையூர் இளையாற்றக்குடி பெருமருதூருடையார் வெ. சி.அ. ராம. அண. ராமசாமி செட்டியார் கொடையுள்ளத்தை வணங்கி மகிழ்ந்திடுவோம்.
வளர்ந்த தலைமுறையும் வளரும் தலைமுறையும் அறவழியில் பொருள் சேர்த்து வாரி வழங்கிடும் வள்ளல்களாக நாம் எந்நாளும் வாழ்ந்திட வழிகாட்டும் சியாமளா பிக்சர்ஸ் வெ. சி. அ. ராம. அண. ராமசாமி செட்டியார் குடும்பத்தினரை கருத்தில் கொள்வோம்.
No comments:
Post a Comment