Tuesday 6 October 2020

அதிகாரம், ஆள் பலம், பணபலம்.....

 இதுவா சாதி மறுப்பு?

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான பிரபு அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். 38 வயதான அவர் தியாகதுருகத்தைச் சேர்ந்த கோயில் குருக்கள் ஒருவரின் 19 வயது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணிபுரிந்துவரும் சுவாமிநாதன் என்பவர் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``வணக்கம். நான் சுவாமிநாதன். தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணியாற்றுகிறேன். என் மகள் திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இங்லீஷ் இரண்டாமாண்டு படிச்சிண்டிருக்கா. என்னுடைய மகளை ஆசைவார்த்தைகள் கூறி, அவரை திசைதிருப்பி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் 1-ம் தேதி மாலை 4 மணியளவில் கடத்திவிட்டார்
ரொம்ப மனஉளைச்சலா இருக்கு. வேதனையாக இருக்கு. இது தொடர்பாக காவல்துறையிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் கொடுக்கச் சென்றால், `நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். எனக்கு பொருளாதார பலமும், அதிகார பலமும் இருக்கு. என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். என்னைக் கொலை செய்துவிடுவேன் என்றும், எனது குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்றும், இதையும் மீறி நீ புகார் அளிக்கச் சென்றால் உன் பொண்ணையே கொலை செய்துவிடுவேன்' என்றும் ஆள்வைத்து மிரட்டுகிறார்.
எனது மகள் சிறு வயதுப் பெண். அவரை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுவிட்டார். கொஞ்சம் தயவு செய்து அவரை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் தனி நபரா இருக்கேன். என்னால் புகார் குடுக்க முடியலை. காவல் நிலையத்துலயும் போய் புகார் கொடுக்க முடியலை. மிரட்டல்கள் வருது. கொலை மிரட்டல்கள் விடுறாங்க. சட்டமன்ற உறுப்பினருடைய தகப்பனார் ஒன்றியச் செயலாளரா இருக்காரு. அ.ம.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரா இருக்கும் கோமுகி மணியன் வீட்டுக்கே வந்து மிரட்டுறாரு. திருநாவலூர் கூட்டுறவு சங்கத் தலைவர் குமாரவேல், என்னைக் கொலை செய்துவிடுவேன் என்றும், என்னிடம் ஆள்கள் இருக்கிறார்கள் என்றும் மிரட்டுகிறார். எனக்கு பயமா இருக்குது. வீட்டில் இருப்பதற்கும், தனியா கோயிலுக்குப் போறதுக்கும் எனக்கு பயமா இருக்குது. என் மகளை எப்படியாது மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கைகூப்பிக் கும்பிடுவதுடன் அந்த வீடியோ காட்சி முடிவடைகிறது.
நேற்று (04.10.2020) இரவு குருக்கள் சுவாமிநாதனைத் தொடர்புகொண்டோம். ``கடந்த 10 வருடமாக என்னுடைய மகனைப்போல எங்களுடன் பழகி வந்தவர் பிரபு. என்னையும், என் மனைவியையும் `அப்பா, அம்மா...' என்றுதான் அழைப்பார். கடந்த 30-ம் தேதி காலேஜுக்கு போன என் பொண்ணு வீட்டுக்கு வரலை. எம்.எல்.ஏ பிரபுதான் ஆசைவார்த்தைகள் கூறி எம்பொண்ணை அழைச்சிக்கிட்டு போயிட்டாருனு கேள்விப்பட்டு அவருக்குப் போன் பண்ணேன். `இது சரியில்லை பிரபு. எம்பொண்ணை அனுப்பிடு'ன்னு கேட்டேன். அதுக்கு, `உன் பொண்ணை 10 வருஷமா நான் லவ் பண்றேன். அப்படில்லாம் அனுப்ப முடியாது. நான் எம்.எல்.ஏங்கறதால சபாநாயகர் உத்தரவில்லாம என் மேல வழக்கு போட முடியாது. உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ'ன்னு சொன்னாரு.
எம்பொண்ணுகிட்ட நான் பேசணும்னு சொன்னேன். அதுக்கும் அவரு அனுமதிக்கலை. 10 வருஷமா லவ் பண்றேன்னு எம்.எல்.ஏ சொல்றாரு. அப்படின்னா அவருக்கு 28 வயசு இருக்கும்போது என் பொண்ணுக்கு 9 வயசு சார். நான் ஜாதி பார்க்கலை. காதலுக்கும் நான் எதிரி கிடையாது. ஆனா, வேலியே பயிரை மேயலாமா? 38 வயதான ஒருவர் 19 வயசுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாமா? 10 வயது வித்தியாசம் என்றாலும் பரவாயில்லை. 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏற்றுக் கொள்வது? அதுமட்டுமில்லாம 20 வயது வரை பெண் குழந்தைகளுக்கு எந்த முடிவையும் சரியாக எடுக்கத் தெரியாது. காவல்துறையில் நான் எந்தப் புகாரையும் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.பி அலுவலகத்திலிருந்து எனக்கு போன் பண்ணின சி.ஐ.டி செந்தில்ங்கறவரு என்னைப் பத்தியும், என் பொண்ணைப் பத்தியும் எல்லா விவரத்தையும் கேட்டு வாங்கினாரு. இப்படி இருக்கும்போது நான் என்ன பண்ண முடியும்" என்று தழுதழுத்தார்.
நேற்று இரவே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவை தொடர்புகொண்டு சுவாமிநாதன் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேடடோம். ``அவர் அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டாரே... அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. இப்போதுதான் அவரிடம் பேசினேன். உங்களுக்கு யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள்" என்றவரிடம், ``குருக்கள் சுவாமிநாதனின் மகளை நீங்கள்தான் அழைத்துச் சென்றீர்களா... தற்போது அவர் உங்களுடன்தான் இருக்கிறாரா?'' என்று நாம் கேட்டபோது, ``உடனே கான்ஃபரன்ஸ் காலில் அவரைக் கூப்பிட்டுவிட்டு உங்களிடம் பேசுகிறேன்" என்று தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இந்தநிலையில் இன்று காலை எம்.எல்.ஏ பிரபுவின் வீட்டில் அவருக்கும், குருக்கள் சுவாமிநாதனின் மகளுக்கும் திருமணம் நடந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதேபோல இன்று காலை 7 மணிக்கு நம்மைத் தொடர்புகொண்ட குருக்கள் சுவாமிநாதன், ``நேற்றுகூட எம்.எல்.ஏ பிரபுவின் அப்பா ஐயப்பன் என் பொண்ணு எங்கே இருக்கான்னு தெரியாது என்று சொன்னாரு. ஆனா இன்னைக்கு அவருதான் முன்னே நின்னு கல்யாணத்தைப் பண்ணிவெச்சிருக்காரு. 20 வயசு வித்தியாசத்துல நடந்த இந்தக் கல்யாணத்தையும், அவங்க எனக்கு பண்ணின நம்பிக்கை துரோகத்தையும் என்னால ஏத்துக்க முடியலை. அவங்க வீட்டு முன்னாடியே நான் உயிரை மாய்ச்சுக்கப் போறேன்" என்று கூறிவிட்டுத் தொடர்பை துண்டித்தார்.
உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி ஆய்வாளரைத் தொடர்புகொண்டு, விவரத்தைக் கூறி விபரீதம் எதுவும் நடப்பதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். அதன்படி அடுத்த சில நிமிடங்களில் குருக்கள் சுவாமிநாதனை எம்.எல்.ஏ பிரபுவின் வீட்டின் அருகில் காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர்.என்று விகடன் பதிவு செய்துள்ளது.
குறிப்பு;இதுவா சாதி மறுப்புத் திருமணம்?இதுக்கா முதல்வர்,துணை முதல்வர்,பத்திரிக்கைகள் எல்லாம் வாழ்த்து சொல்லி அவனை பாராட்டியது?
ஒரு தலித் எம்எல்ஏ,அவன் சாதியை விட தாழ்ந்த சாதியாக கருதக்கூடிய சாதிகள் எத்தனையோ உள்ளன. அதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து,சாதி மறுப்பை காட்டியிருந்தால் இவனை வாழ்த்தலாம்.இவனை விட மிக உயர்வான சாதியாக கருதக்கூடிய ஒரு சாதி பெண்ணை திருமணம் செய்துள்ளான்.இதுவா புரட்ச்சி?இதுவா தியாகம்?இதுக்கு எதுக்கு அவனுக்கு வாழ்த்து மழை?
சொல்லப் போனால்,அவன் என்ன சாதி என்று தெரிந்தும் அவனை விரும்பி திருமணம் செய்த அந்த உயர்ந்த சாதி பெண்ணை அல்லவா பாராட்ட வேண்டும்.அவள் அல்லவா சாதி மறுப்பு திருமணம் செய்து புரட்ச்சி செய்துள்ளாள்.
இன்று வாழ்த்திய தலைவர்கள் நடுநிலைவாதிகள் மகளை இவன் இப்படி திருமணம் செய்திருந்தால்..?
இந்த குருக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்.யார் யாரை எங்கு வைக்க வேண்டும் என்ற புத்தி இருக்க வேண்டாமா?அப்பா,அம்மா என்று 10 ஆண்டுகளாக சொன்னானாம்.சொந்த பிள்ளைப் போல் வளர்ந்தானாம்.?இவருக்கு சாதி ஒரு பிரச்சனை இல்லையாம்,வயதுதான் பிரச்சனையாம்..இனி அழுது பயன்?
இது வீட்டில் பெண் பிள்ளைகளை வைத்துள்ள ஒவ்வொருவருக்கும் பாடம்.


No comments:

Post a Comment