திருமந்திரம் - பாடல் # 1448:-ஐந்தாம் தந்திரம் ., 5,சரியை
( உருவ, அருவ வழிபாடுகள்)
கிரியை, யோகங்கள், கிளர் ஞான பூசை
அரிய சிவன்உரு அமரும் அரூபம்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை யாமே.
விளக்கம்
கிரியை நெறியில் நிற்பவர்கள் சிவனுடைய உருவ வழிபாட்டை மேற்கொள்ளுவர்.
மெய் ஞானம் அடைந்தவர் அருவ வழிபாட்டினை மேற்கொள்ளுவர்.
அன்பர்கள் தம் மனப் பக்குவத்துக்கு ஏற்ற வண்ணம் இறைவனை உருவமாகவோ அல்லது அருவமாகவோ வழிபடுவார்கள்.
No comments:
Post a Comment