சாதனை மாணவர்கள்.
பெரியகுளம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார் நீட் தேர்வில் இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பெரியகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜீவித்குமார் நீட் தேர்வில் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல் தனியார் பள்ளி மாணவர் ஶ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்களைப் பெற்று இந்திய அளவில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 8-வது இடமும் தமிழக அளவில் நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நீட் தேர்வு எழுதியவர்களில் 8.87% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடப்பாண்டில் மொத்தம் 57..44% மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் நீட் தேர்வில் 48.57% மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
No comments:
Post a Comment