Wednesday 29 November 2023

நேர்வழி பாதுகாப்பானது . .

 நேர்வழி பாதுகாப்பானது . .

''மாபெரும்
செயல்களைத் திறம்படச்
செய்து முடிக்க
உறுதி எடுக்க வேண்டும் என்றால்,
உங்களுக்கு
இன்றியமையாத
முதல் மூலப்பொருளான,
வெற்றிக்குத் தேவையான முதல்படியான, தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும்.
தடைகளையும்,
அவமதிப்புகளையும்,
தன்னம்பிக்கை தான்
சமாளித்து அடித்துத் துரத்தி
பொன்னாக நம்மை உருவாக்கும்.
நேர்வழி
பாதுகாப்பானது
என்பதை உணர்த்தும்.
தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள்.
அனைத்தையும்
உங்கள் துணிச்சல் தான் சாதிக்கும்.
எதையும் கண்டு
பயப்படாதீர்கள்.
நீங்கள் மகத்தான
காரியங்களைச் செய்வீர்கள்.
எந்த விநாடி
பயப்படத் துவங்குகிறீர்களோ,
அந்த விநாடியில் இருந்து நீங்கள் ஒன்றுமே
இல்லாதவர்களாகி விடுகிறீர்கள்.
உலகத்தில் மிக அதிகமான துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்தப் பயம் தான்.
இந்தப் பயம் தான் எல்லா மூடநம்பிக்கைகளுக்கும் காரணம்.
எழுந்திருங்கள்,
துணிச்சல் கொள்ளுங்கள்,
குறிக்கோள் அடையப்படும் வரை நில்லாதீர்கள்.
''தன்னம்பிக்கை,
தெளிவு,
துணிச்சல்''
இந்த மூன்றும் தான்
ஒருவனை எப்போதும் காப்பாற்றி
வழி நடத்திச் செல்லும்.

No comments:

Post a Comment