மதுரை நகரத்தார் சங்கத்தின்
முத்திரை பதித்த முப்பெரும் விழா.
மதுரை நகரத்தார் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக வரலாற்று வெற்றியினைப் பெற்ற பாகனேரி ஆர்எம். வயிரவன் மற்றும் நிர்வாகிகள் நடத்திய முதியோர் நலன் காக்கும் உரிமைத் தொகை மாதம் ரூ500 வழங்குதல், உயர் கல்வி மாணவ மாணவியருக்கு உதவித் தொகை வழங்குதல், பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி இனிப்பு பாக்கெட் வழங்குதல் என முப்பெரும் விழா இன்று மாலை விடுதி அரங்கத்தில் நடைபெற்றது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் பள்ளத்தூர்
மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம்
ஆற்றுப் படுத்துதல்
என்ற தலைப்பில் பங்கேற்பார்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி பலத்த கரவொலிகளுக்கிடையே ஐம்பத்து ஐந்து நிமிடங்கள் சிறப்புரை ஆற்றுகையில் மனிதப் பண்பில் உயர்ந்த நிலை உதவுதல், கல்விக்கு பேருதவி புரிதல், திருமணத் தகவல் பல வழிகளில் பரிமாற்றம், பொதுப் பணத்தை நெறியுடன் கையாளும் தன்மை, சிறந்த தலைமைப் பண்பு, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டும் நிகழ்வு என இந்தப் புதிய தலைமை ஏற்று 288 மணி நேரத்தில் ஏராளமான சீரமைப்புப் பணிகளைச் செய்துள்ளது பாராட்டுக்குரியது என்றார்.
இவர்களது திட்டங்கள் குறிப்பாக துணைத் தலைவர் தேவகோட்டை ஏ. சொக்கலிங்கம் கடந்த பல ஆண்டுகளாக முப்பதுக்கும் அதிகமான வாட்சாப் குழு வழியாக அதன் அட்மின் என்ற வகையில் ஏராளமான வழிகாட்டும் பணியினைச் செய்து வருகிறார். அதன் நீட்சியாக இங்கு பல நற்செயல்களை செய்திட வேண்டும் என்றார்.
மற்ற நிர்வாகிகள் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலை புதிய வரலாற்றினை உருவாக்கும் என்றார்.
நமது முன்னோர்கள் செய்த கல்விப் பணி, அறப்பணிகள், வணிகம், தொழில் மேன்மை இன்று நமக்கு பெரும் அடையாளம். அதனை நாம் மேலும் மேன்மை பெற்றிடச் செய்ய வேண்டும் என்றார்.
செயலாளர் எஸ். சோமசுந்தரம் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை துணைச் செயலாளர் ஆ. வள்ளியப்பன், பொருளாளர் ஏ. லெட்சுமணன், மேனாள் நிர்வாகிகள் எம். முருகப்பன், சிவக்குமார், ஆர்எம். ஆனந்த், பிரபாகரன் மற்றும் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை நல்லம்மை சுப்பிரமணியன், சி. ஆதப்பன் தொகுத்து வழங்கினர்.
விழாவில் கீழச்சிவல்பட்டி ராஜேந்திரன், இந்தியன் வங்கி மேனாள் துணைப் பொது மேலாளர் முத்தப்பன், வடக்கு நகரத்தார் சங்கத்தின் தலைவர் எஸ்பி எஸ் எஸ். சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் , ஜி. உடையப்பன், பிஎல். சிதம்பரம், ஒத்தக்கடை ராம. அருணாசலம், மேனாள் நிர்வாகிகள் ஆர். மெய்யப்பன், வயிரவன், எஸ். கணேசன், ரிவோ மீனாட்சி சுந்தரம் , உதவும் கரங்கள் அமைப்பாளர் எஸ் எம். முருகப்பன், திருநகர் நகரத்தார் சங்கத்தின் நிர்வாகிகள், மகளிர் சங்கத்தின் நிர்வாகிகள், இளைஞர் சங்கத்தின் நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment